தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. பிளவிற்கு பின்னணியில் இருப்பது தி.மு.க. - நயினார் நாகேந்திரன்

Published On 2025-09-09 12:23 IST   |   Update On 2025-09-09 12:24:00 IST
  • போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
  • செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

* போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.

* தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியதைத்தான் கேட்டனர்.

* அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது தி.மு.க.

* தி.மு.க.வின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்சனைகளும் இங்கு நடக்கின்றன.

* செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் டெல்லி செல்கிறார்.

Tags:    

Similar News