தமிழ்நாடு செய்திகள்

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை - உலகளாவிய திறன் மையத்தின் தலைநகர் 'தமிழ்நாடு' - மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-08 11:26 IST   |   Update On 2026-01-08 11:26:00 IST
  • சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் சென்ற சேர வேண்டும் என திட்டங்களை வகுத்தவர் கலைஞர்.
  • தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

* தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம்.

* தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது.

* தமிழ்நாட்டின் தொழில்நுட்ப பயணத்திற்கு இன்று நடைபெறும் தகவல் தொழில்நுட்ப மாநாடு சிறப்பு சேர்க்கும்.

* திராவிட மாடல் ஆட்சிக்குப்பின்னர் தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப மாநாடுகள் நடத்தப்படுகிறது.

* சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் சென்ற சேர வேண்டும் என திட்டங்களை வகுத்தவர் கலைஞர்.

* உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது.

* நவீனத்தை நோக்கிய பாய்ச்சலுடன் தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது.

* தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.

* 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது.

* திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்கும் கேள்விக்கு அவர்கள் வெளியிடும் வளர்ச்சி தரவுகளே பதில்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News