தமிழ்நாடு செய்திகள்

மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-11-26 11:40 IST   |   Update On 2025-11-26 11:40:00 IST
  • சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.
  • என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்ததில் பெருமையும் வீரமும் அடைகிறேன்.

* சொன்னால் சொன்னதை செய்பவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

* சொன்னால் சொன்னதை செய்வேன் என்பதற்கு சாட்சி தான் பொல்லான் சிலை.

* தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான்.

* அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டு சட்டம், மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

* அருந்ததியினரில் 3,944 மாணவர்கள் பொறியியலும், 193 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கிறார்கள்.

* என்னுடைய சார்பில் அருந்ததியினர் மசோதாவை அறிமுகப்படுத்த கலைஞர் கேட்டுக் கொண்டார்.

* ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமையடைகிறேன்.

* அருந்ததியினர் மக்களுக்கு தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

* கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

* தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியை பெறுவது தான் வரலாறு என பாராட்டு கிடைத்துள்ளது.

* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி.

* எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News