தமிழ்நாடு செய்திகள்

SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-11-14 12:40 IST   |   Update On 2025-11-14 12:40:00 IST
  • தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.
  • SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

* தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது.

* பா.ஜ.க.வின் வாக்குத்திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளார்.

* SIR பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

* மக்களின் வாக்குரிமையை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

* ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் பாக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

* SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது.

* தமிழ்நாட்டில் உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க. பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும்.

* தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநிலம் SIR-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகிறது.

* மக்களை சந்திக்க தெம்பில்லாமல் SIR என்ற குறுக்கு வழியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு.

* தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இல்லை.

* அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டு SIR-ஐ ஆதரித்து பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News