தமிழ்நாடு செய்திகள்

சிறுபான்மையினர் சம உரிமைகளுக்கு தகுதியானவர்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-28 19:44 IST   |   Update On 2025-07-28 19:44:00 IST
  • கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது.
  • வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு.

மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

சத்தீர்கரில் பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாவது கவலையளிக்கிறது.

வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு. சிறுபான்மையினரை பயமுறுத்தக் கூடாது.

இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News