தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது - ஆர்.பி. உதயகுமார்

Published On 2025-06-20 10:26 IST   |   Update On 2025-06-20 10:26:00 IST
  • பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.
  • கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டது.

கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். பஜவுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர் என்றால் வெறுப்பு என முதல்வர் ஸ்டாலினும் விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக வாய் திறக்காதது குறித்து திமுக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கீழடி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூனுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது. அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். கீழடி குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்" என தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News