தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி - அமைச்சர் ரகுபதி

Published On 2025-02-10 12:53 IST   |   Update On 2025-02-10 12:53:00 IST
  • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.
  • வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.

சென்னை:

அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்கு செலுத்தியுள்ளனர்.

* அதிமுகவினர் திமுகவிற்கு மனமுவந்து வாக்கு செலுத்தியது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

* பல்வேறு புதிய திட்டஙகளை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

* எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.

* வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.

* அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. கட்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

* பாஜக கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் எடப்படி பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பார்.

* சீமான் கைது செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றத்தில் அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும்.

* சீமான் மீதான அனைத்து புகார்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News