தமிழ்நாடு செய்திகள்

சூழ்நிலை ஏற்பட்டால் விஜயை கைது செய்வோம்- அமைச்சர் துரைமுருகன்

Published On 2025-10-04 13:14 IST   |   Update On 2025-10-04 13:14:00 IST
  • கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
  • கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.

வேலூர்:

வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.

கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.

விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News