தமிழ்நாடு செய்திகள்

வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்- துரைமுருகன்

Published On 2025-08-02 13:56 IST   |   Update On 2025-08-02 13:56:00 IST
  • தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
  • பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

* வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்.

* தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

* பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.

* திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

Tags:    

Similar News