தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் தண்டவாளம் பழுது- சேவை பாதிப்பால் பயணிகள் தவிப்பு

Published On 2025-04-14 14:16 IST   |   Update On 2025-04-14 14:16:00 IST
  • விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படவில்லை.
  • விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரெயில்களும் ஒரே வழித்தடத்தில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்டது.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி செல்லும் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டது. இன்று காலையில் தொழில்நுட்ப கோளாறால் விம்கோ நகர் செல்லும் மெட்ரோ ரெயிலும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் நோக்கி செல்லும் மெட்ரோ ரெயிலும் ஒரே நடை மேடையில் இருந்து தான் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்படவில்லை. இதனால் காலையில் சிறிது நேரம் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து மெட்ரோ ரெயில்களும் ஒரே வழித்தடத்தில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில் தாமதமாக இயக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இன்று விடுமுறை தினமாக இருந்ததால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Tags:    

Similar News