மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் தேர்தல் ஆணையம் - சண்முகம்
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
- ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
* தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைத்தடியாக நடந்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
* மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
* ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
* தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.