தமிழ்நாடு செய்திகள்

மகாசிவராத்திரி விழா: சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

Published On 2025-02-20 09:24 IST   |   Update On 2025-02-20 09:24:00 IST
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
  • அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

வத்திராயிருப்பு:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News