தமிழ்நாடு செய்திகள்

மன்னிப்பு கேட்டு வரட்டும்: பொதுச் செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்- ஓ.எஸ். மணியன்

Published On 2025-11-10 19:07 IST   |   Update On 2025-11-10 19:07:00 IST
  • செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக-வில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளனர்.
  • நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சீனியர் தலைவர் செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். பல தலைவர்கள் பிரிந்து சென்றுள்ளனர்.

துரோகம் செய்தவர்களுக்கு ஒருபோதும் கட்சியில் மீண்டும் இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில்தான், நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் 2026 சட்டமன்ற தேர்தலை நீக்கப்பட்ட, பிரிந்து சென்றவர்களை இணைத்து அதிமுக சந்திக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓ.எஸ். மணியன் "மன்னிப்பு கேட்டு வரட்டும்: பொதுச் செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்" என்றார்.

Tags:    

Similar News