தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் சீரமைப்பு பணி- டெண்டரை கோரிய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

Published On 2025-02-14 09:25 IST   |   Update On 2025-02-14 09:25:00 IST
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
  • கோயம்பேடு மார்க்கெட்டில் உயர் கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் எப்போதும் வியாபாரிகள் கூட்டம் காணப்படும்.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடியில் சீரமைப்பதற்கான டெண்டரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோரியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உயர் கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News