தமிழ்நாடு செய்திகள்

திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்த விவகாரம் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Published On 2025-11-15 21:38 IST   |   Update On 2025-11-15 21:38:00 IST
  • அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
  • அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.

இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News