தமிழ்நாடு செய்திகள்
வேளாண் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீடு உயர்வு- அரசாணை வெளியீடு
- இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு.
- இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரணத்துக்கான இழப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ரூ.2500ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.