மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
- மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
- பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.
மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.