தமிழ்நாடு செய்திகள்

ஓய்வுபெற்ற பஸ் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2025-08-20 14:53 IST   |   Update On 2025-08-20 14:53:00 IST
  • தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
  • அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம். தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.

அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை. தமிழக அரசு தேர்தல் நேர வாக்குறுதியையும், அரசுப் போகுவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களின் பணிக்காலத்தையும், உழைப்பையும், போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News