தமிழ்நாடு செய்திகள்
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி
- டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
- மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலியாலும் அசவுகரியப்பட்டார்.
உடனடியாக டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் வானகரம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.