தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி அருகே சத்துணவு கூடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

Published On 2025-06-24 10:22 IST   |   Update On 2025-06-24 10:22:00 IST
  • மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
  • உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த அயன்ராசாபட்டி தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News