தமிழ்நாடு செய்திகள்

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம் நிறுத்தி வைப்பு- பயணிகள் அவதி

Published On 2025-04-04 10:58 IST   |   Update On 2025-04-04 10:58:00 IST
  • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார்.
  • விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட விமானம் 113 பயணிகளுடன் ரன் வேயில் சிறிது தூரம் புறப்பட்டு சென்று தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News