தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையன் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை - எடப்பாடி பழனிசாமி

Published On 2025-11-27 13:52 IST   |   Update On 2025-11-27 13:52:00 IST
  • நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான்.
  • ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு.

மதுரை:

சென்னையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் பேசும்போது, நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான் என்றும், மற்றவர்கள் ஆளக்கூடாதா? என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. அவர்களது கருத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது. அவர் (செங்கோட்டையன்) தற்போது அ.தி.மு.க.வில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று என்றார்.

Tags:    

Similar News