தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி

Published On 2025-10-30 14:54 IST   |   Update On 2025-10-30 14:54:00 IST
  • த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
  • 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

* அ.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.

* 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் தங்கள் ஊருக்கு வந்த என்னை த.வெ.க. தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.

Tags:    

Similar News