தமிழ்நாடு செய்திகள்

புதியவர்களுக்கு பதவி- எடப்பாடி பழனிசாமி புது முடிவு

Published On 2025-01-31 14:07 IST   |   Update On 2025-01-31 14:07:00 IST
  • கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.
  • தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகளிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவி வழங்குவதில் கவனம் தேவை.

* மாநில பொறுப்பு வழங்கியதால் தான் கட்சி மாறியது மிகப்பெரிய செய்தியானது.

* கள ஆய்வு கூட்டத்தின்போது தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்க வேண்டும்.

* மற்ற மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையில் நடக்கக்கூடாது.

* தேவையற்றவர்களை கள ஆய்வு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News