தமிழ்நாடு செய்திகள்

இலவச பட்டுச்சேலை, பசுமை வீடுகள்... இ.பி.எஸ். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்

Published On 2025-07-22 11:45 IST   |   Update On 2025-07-22 11:45:00 IST
  • அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.
  • பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெசவு தொழிலாளர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அப்போது. கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியிடம் நெசவு தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து எடப்படி பழனிசாமி பேசியதாவது:-

* அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.

* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.

* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின் ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

* பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.

* அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News