தமிழ்நாடு செய்திகள்
செங்கோட்டையன் கெடு- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
- பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார்.
- எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்த கெடுவை அடுத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.