தமிழ்நாடு செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-04-23 11:30 IST   |   Update On 2025-04-23 11:30:00 IST
  • குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
  • தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்.

* குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.

* தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.

* இறந்து கிடக்கும் கணவர் அருகில் மனைவி அமர்ந்து அழும் காட்சி மனதை வாட்டியது.

* பயங்கரவாதிகளின் இரக்கமற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News