தமிழ்நாடு செய்திகள்

ஞானசேகரனுடன் பேசிய அந்த SIR யார்? - எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி

Published On 2024-12-31 12:15 IST   |   Update On 2024-12-31 12:15:00 IST
  • போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.
  • குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

சென்னை:

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சி தருகிறது.

* அண்ணா பல்கலைகழக விவாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார்? மாணவி அளித்த புகாரில் தான் இன்னொருவர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

* இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தப்பித்து விடக்கூடாது.

* காவல்துறை ஆணையருடன் முரண்பட்டு உயர்கல்வி அமைச்சர் பேசுகிறார்.

* பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இத்தனை அமைச்சர்கள் பேசுவதற்கு என்ன காரணம்.

* யாரை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சி செய்கிறது? இவ்வளவு பயம் ஏன்?

* பாதிக்கப்பட்ட பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில் பதிவிடப்பட்ட அந்த நபரை காப்பாற்றவே தொடர்ந்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.

* பொள்ளாச்சி விவகாரத்தில் உடனடியாக சிபிஐ வசம் வழக்கு விசாரணையை ஒப்படைத்தோம்.

* புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது.

* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.

* தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

* ஆட்சி மீதான பழியை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் மாறிமாறி அறிக்கை வெளியிடுகின்றனர்.

* போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.

* மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவே அதிமுக போராட்டம் நடத்தியது.

* போராட்டம் நடத்துவோரை கைது செய்ய 1000 போலீசார் வருகின்றனர், பாலியல் விவகாரத்தில் இந்த வேகத்தை காட்டாதது ஏன்?

* குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியாவுடன் இந்த கோரிக்கையை வைத்தோம்.

* கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார். 

Tags:    

Similar News