தமிழ்நாடு செய்திகள்
தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை - இ.பி.எஸ்.
- தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.
- சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.
* கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை.
* மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர்.
* இன்னும் 9 மாதங்கள்தான் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.