தமிழ்நாடு செய்திகள்

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2024-12-14 17:12 IST   |   Update On 2024-12-14 17:12:00 IST
  • கனமழை எச்சரிக்கை, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதன் காரணமாகவும் கூட்டம் ஒத்திவைப்பு.
  • கூட்டம் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதன் காரணமாகவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News