தமிழ்நாடு செய்திகள்

கடலூர் அருகே விபத்து- கார் மோதியதில் 3 பேர் பலி

Published On 2025-04-21 08:36 IST   |   Update On 2025-04-21 08:36:00 IST
  • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு நேரு, சரண்யா, கல்பனா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News