தமிழ்நாடு செய்திகள்

முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-15 08:07 IST   |   Update On 2025-10-15 08:07:00 IST
  • நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
  • வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின.

அதைத்தொடர்ந்து இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News