தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-09 12:32 IST   |   Update On 2025-05-09 12:32:00 IST
  • ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
  • 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* திருச்சி பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினேன்.

* பஞ்சப்பூரில் ரூ.129 கோடியில் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்துள்ளேன்.

* ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் கல்வி தரம் பெருமளவு உயர்ந்துள்ளது.

* மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க அதிக அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* தி.மு.க. ஆட்சியில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளதற்கு பொதுத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதே சான்று.

* தி.மு.க. ஆட்சியில் ஏராளமான முத்திரை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* திராவிட இயக்கத்தின் பல்வேறு போராட்ட வரலாறு திருச்சியில் தான் தொடங்கியது.

* 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் மெகா திட்டங்கள் திருச்சி தரப்பட்டுள்ளது.

* தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடங்கியதும் முதல் பயணம் திருச்சி தான்.

* ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News