தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதலமைச்சர் உத்தரவு

Published On 2025-11-23 08:32 IST   |   Update On 2025-11-23 08:32:00 IST
  • ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
  • இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், ஈரோடு தமிழன்பன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இறுதிக்காலம் வரை தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் தமிழன்பன். அவரின் தமிழ்த்தொண்டை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News