தமிழ்நாடு செய்திகள்
காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறை உள்ளது - முதலமைச்சர் விளக்கம்
- தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
- காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.
சென்னை:
சட்டசபையில் காவலர்களுக்கு அளிக்கப்படும் வார விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:
* தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
* உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 67,233 நபர்களுக்கும் வார விடுமுறை வழங்கப்படுகிறது.
* முக்கியமான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு காலங்களில் மட்டும் வார விடுமுறை வழங்க முடிவதில்லை.
* காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.