தமிழ்நாடு செய்திகள்

சித்திரை முழுநிலவு மாநாடு: பொதுமக்களுக்கு அன்புமணி வேண்டுகோள்- வீடியோ வெளியீடு

Published On 2025-05-07 18:02 IST   |   Update On 2025-05-07 18:02:00 IST
  • சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
  • மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

பின்னர், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News