தமிழ்நாடு செய்திகள்

4 மூத்த வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந்தேதி தேநீர் விருந்து

Published On 2025-04-25 12:10 IST   |   Update On 2025-04-25 12:10:00 IST
  • மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
  • சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.

சென்னை:

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.

குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.

இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News