தமிழ்நாடு செய்திகள்

வேதியியல் வினாத்தாள் வெளியானதா? - ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் சென்டம்

Published On 2025-05-14 12:55 IST   |   Update On 2025-05-14 12:55:00 IST
  • செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
  • தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 பேரும், செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35 பேரும் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.

தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்று விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News