தமிழ்நாடு செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே

Published On 2025-06-07 07:32 IST   |   Update On 2025-06-07 07:32:00 IST
  • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
  • 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16127) நாளை (ஞாயிற்றுக்கிழமை), 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News