தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-07-27 10:19 IST   |   Update On 2025-07-27 10:19:00 IST
  • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
  • மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் காலனியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய வாலிபர் ஒருவர் இன்று மாலையில் முதலமைச்சர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் அவரது வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

மிரட்டல் விடுத்த நபரின் பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

மிரட்டலை தொடர்ந்து இன்று காலையில் முதலமைச்சரின் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் முதலமைச்சரின் வீடு உள்ள சித்தரஞ்சன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News