தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2026-03-04 11:14 IST   |   Update On 2026-03-04 11:14:00 IST
  • தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என நேற்றிரவு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தனியார் நிறுவனத்தில் காவல்துறையினர் இரவு முழுவதும் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News