நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்
- பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் நா.த.க. சார்பில் போட்டியிட்டவர் ஆவார்.
- பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.
நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.
நா.த.க. சார்பில் பாவேந்தன் 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
* பெரியார் குறித்த விமர்சனம் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எட்டும்.
* நா.த.க. கொள்கைக்கு எதிராக முன்னுக்குப்பின் முரணாக சீமான் பேசுகிறார்.
* பெரியாரை தமிழ் தேசியத்துக்கு எதிராக சீமான் முன்னிறுத்துவது பேராபத்து.
* நா.த.க.வை வீழ்ச்சி பாதையை நோக்கி இழுத்து செல்கிறார் சீமான்.
* பெரியார், பிரபாகரனை நேரெதிராக நிறுத்துவது சங்பரிவார்களுக்கு விருந்தாக அமையும்.
சீமானின் அண்மைக்கால நடவடிக்கைகளை ஏற்க முடியாததால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ள நிலையில், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.