தமிழ்நாடு செய்திகள்

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

Published On 2024-12-09 20:32 IST   |   Update On 2024-12-09 20:32:00 IST
  • கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News