தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் அன்புமணி

Published On 2025-05-29 16:30 IST   |   Update On 2025-05-29 16:30:00 IST
  • பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
  • ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில் பாமக நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நாளை முதல் ஞாயிறு வரை பாமக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார்.

மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் அன்புமணி கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

Tags:    

Similar News