தமிழ்நாடு செய்திகள்
திருப்போரூரில் இருந்து 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்
- ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் 100 நாட்கள் நடைபயணம்.
- 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார்.
'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அன்புமணி நடைபயணத்தை தொடங்கினார்.
சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசனப்படி அனைவரும் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.