தமிழ்நாடு செய்திகள்
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
- விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
- 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.