தமிழ்நாடு செய்திகள்

தொழில்நுட்ப கோளாறால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நிறுத்தம்

Published On 2025-09-03 07:30 IST   |   Update On 2025-09-03 07:30:00 IST
  • 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
  • விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டது.

180 பயணிகளுடன் இன்று காலை 4.45 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓடுதள பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News