தமிழ்நாடு செய்திகள்

கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க.வினர்... இ.பி.எஸ் காவி உடையில் வராதது மகிழ்ச்சி - மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-08 11:38 IST   |   Update On 2025-04-08 11:38:00 IST
  • சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
  • முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.

நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்த நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வருகை தந்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி என்று கூறினார்.

முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, அ.தி.மு.க.வினர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News