தமிழ்நாடு செய்திகள்
திருவள்ளூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- திருவள்ளூர் பஸ் நிலையம், ஜெ.என். சாலை, சி.வி நாயுடு சாலை, பெரிய குப்பம் போன்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பெரியக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த ஒரு பையுடன் ஓட்டம் பிடித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் பஸ் நிலையம், ஜெ.என். சாலை, சி.வி நாயுடு சாலை, பெரிய குப்பம் போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பெரியக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்துப்பணியில் இருந்தபோது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த ஒரு பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பெரிய குப்பத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.