தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம்- பொங்கல் விழாவில் தமிழிசை

Published On 2024-01-15 09:04 GMT   |   Update On 2024-01-15 09:04 GMT
  • இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
  • தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.

பொங்கல் விழாவையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம். இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் திக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று சொல்லு போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது. தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தினால் தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News